பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
அதுபோல் உலகம் பகலவனை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
உலகப்பொதுமறை திருக்குறளை மக்கள் வாழிவியலாக்கினால் – குடும்பங்களில் நன்னெறி வளரும்; ஊரில் அறம் பெருகும்; நாட்டில் சமத்துவம் மலரும்; உலகில் அமைதி நிலவும் என்பது சான்றோர் முடிவு.
“மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக் கொள், மக்களுக்காகத் தொண்டு செய்”என்னும் கருத்தியலுக்கேற்ப, கூட்டமைப்பின் இலக்கினை வென்றெடுக்க தமிழ்நாடு – இந்திய மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் ஊர்/நகர்கள்தோறும் கிளை அமைப்புகள் ஏற்படுத்தி, திருக்குறள் வழிநின்று தமிழ்ச் சமுதாய மீட்டுருவாக்கத் திட்டம் வகுத்துச் செயல்படுத்தி வருகிறோம்.
உலக வரலாற்றில் முதல்முறையாக தமிழர் மறை திருக்குறளைப் புலமை நூல் என்ற நிலை- யிலிருந்து மாற்றி புரட்சிநூலாக ஏற்று திருக்குறள் சமுதாயம் அமைத்திட முயல்கிறோம்!
திருக்குறள் கூட்டமைப்பு காலத்தின் கட்டாயம் :
“ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு” என்னும் முதுமொழி உணர்த்துவதன் அடிப்படையில், ஒருங்கிணையவும், திருவள்ளுவர் கூறும்
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்”
என்னும் திருக்குறள் (466) முன்வைக்கும் பேருண்மையினைக் கருத்தில் கொண்டுத் தொண்டாற்றவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தவும், பட்டறிவைப் பகிர்ந்து கொள்ளவும், திருவள்ளுவர்/திருக்குறள் அமைப்புகளுக்கும், பற்றாளர்களுக்கும் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றிபெறவும், அனைத்துத் திருவள்ளுவர்/திருக்குறள் அமைப்பினர் மற்றும் அமைப்புச் சாராத்திருக்குறள் தொண்டர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தவும் உலகெங்கும் உள்ள திருவள்ளுவர்/திருக்குறளை நடுவப்படுத்தி செயலாற்றிவரும் திருக்குறள் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

தலைவர்

பொதுச் செயலாளர்

பொருளாளர்

தலைவர்
அறக்கட்டளை

பொருளாளர்
அறக்கட்டளை

தலைமைக் கரண ஆசான்

அமைப்புச் செயலாளர்

தலைமை நிலையச் செயலாளர்
கூட்டமைப்புத் தோற்றம் – 01.10.2017 – சென்னை வள்ளுவர் கோட்டம்
ஒருங்கிணைப்பு மாநாடு – 02.06.2018 – தஞ்சை பாரத் கல்விக்குழுமம்
கூட்டமைப்பின் முதல் செயற் குழுக் கூட்டம் – 09.09.2018 – கரூர்
ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் – 10.11.2018 – மதுராந்தகம் திருக்குறள் பீடம்
மாநில அளவிலான கரணப்பயிற்சி முகாம் – 01-12-2018 – இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம்
இரண்டாவது செயற் குழுக் கூட்டம் – 02-12-2018 – இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம்
இரண்டாவது ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் – 24.02.2019 – திருச்சி பதின்மப் பள்ளி
கூட்டமைப்பின் மூன்றாம் செயற் குழுக் கூட்டம் – 16.03.2019 – கரூர் வள்ளுவர் கல்வி நிறுவனம்